பைஜுஸ் இந்தியா சி.இ.ஓ. அர்ஜுன் மோகன் பதவி விலகல்!
பைஜுஸ் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அர்ஜுன் மோகன் பதவி விலகினார். இந்தப் பொறுப்பை ஏற்று ஏழு மாதங்களுக்குப் பிறகு சிக்கலில் உள்ள கல்வித் தொழில்நுட்ப நிறுவனம் பைஜுஸிலிருந்து இன்னொரு முதன்மை பொறுப்பாளார் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
பைஜுஸ் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அர்ஜுன் மோகன் பதவி விலகினார். இந்தப் பொறுப்பை ஏற்று ஏழு மாதங்களுக்குப் பிறகு சிக்கலில் உள்ள கல்வித் தொழில்நுட்ப நிறுவனம் பைஜுஸிலிருந்து இன்னொரு முதன்மை பொறுப்பாளார் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, பைஜுஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன் தினசரி நடவடிக்கைகளைக் கையாள பொறுப்பேற்றுக் கொண்டார். பதவி விலகிய அர்ஜுன் மோகன் ஆலோசகராக இருப்பார்.
"அர்ஜுன் ஒரு சவாலான காலகட்டத்தில் பைஜுஸை சிறப்பாக வழிநடத்தியுள்ளார்," என்று ரவீந்திரன் பாராட்டினார்.
BYJU இன் நிறுவனக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த மோகன், கடைசியாக தலைமை வணிக அதிகாரியாக பணியாற்றினார். அவர் பைஜுஸில் இருந்து விலகி இருந்த போது அப்கிராடின் தலைமைச் செயலதிகாரியாக இருந்தார். ஜூலை மாதம் பைஜூவில் மீண்டும் சேர்ந்தார்.
மறு அமைப்பாக்கம்:
தலைமைத்துவக் குழப்பங்களுக்கு மத்தியில், நெருக்கடியான இந்த நிறுவனம், செயல்பாடுகளை சீராக்குவதை நோக்கமாகக் கொண்ட மறுசீரமைப்பையும் அறிவித்துள்ளது. கற்றல் செயலி, ஆன்லைன் வகுப்புகள், கல்வி மையங்களோடு தேர்வுகளுக்கான தயாரிப்பு ஆகிய மையப் பிரிவுகளாக அதன் வணிகங்களை ஒருங்கிணைக்க அறிவித்துள்ளது.
இந்த ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி தலைமைகள் நியமிக்கப்படும். இந்த புதிய ஏற்பாடு செலவு குறைந்ததாகவும் சந்தை வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதாகவும் இருக்கும்.
இது தொடர்பாக ரவீந்திரன் கூறும்போது,
“இந்த மறுசீரமைப்பு3.0-ன் தொடக்கமாகும். அதிக சுறுசுறுப்பான இந்த அமைப்பு, வளரும் சந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப இயங்கும். குறிப்பாக உயர்-தனிப்பட்ட கல்வியின் துறையில், விரைவாக மாற்றியமைக்க தயாராக உள்ளது. எங்களது சிறப்பான வணிகப் பிரிவுகள் மூலம் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைத் திறப்போம். மேலும் லாபத்திலும் தொடர்ந்து கவனம் செலுத்தும்,” என்றார்.
மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக 5,000 க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்வதும் அடங்கும். பைஜுவின் தற்போதைய பணியாளர் எண்ணிக்கை 12,000 முதல் 13,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022 ஆம் ஆண்டில் 50,000க்கும் மேல் இருந்தது. அனைவருக்குமான சம்பளங்களைக் கொடுப்பதில் நிறுவனம் கடும் சவால்களை எதிர்கொண்ட நிலையில் ஊழியர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைக்கப்படுகிறது.
நிறுவனம் சிக்கலான நிதி நெருக்கடிகளுடன் முதலீட்டாளர்கள் தொடர்ந்த வழக்கையும் எதிர்கொண்டு வருவதோடு அன்னியச் செலாவணி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளையும் எதிர்கொண்டு வருகிறது.