‘நவி’ ஸ்டார்ட்-அப்: வாரத்திற்கு 80-100 மணி நேரம் உழைக்கும் சச்சின் பன்சல்!
சச்சின் பன்சல், இவர் ஃபிளிப்கார்ட்டில் பணியாற்றியவர். அதிலிருந்து வெளியே வந்த சில மாதங்களில் ‘நவி’ என்னும் பைனான்சியல் டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கினார். தனது இந்த முயற்சி குறித்து அவர் உற்சாகமாகப் பேட்டியளித்துள்ளார்.
சச்சின் பன்சல், இவர் ஃபிளிப்கார்ட்டின் இணை நிறுவனர். அதிலிருந்து வெளியே வந்த சில மாதங்களில் ‘நவி’ என்னும் பைனான்சியல் டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கினார். தனது இந்த முயற்சி குறித்து அவர் உற்சாகமாகப் பேட்டியளித்துள்ளார்.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சல் தனது ஃபிண்டெக் ஸ்டார்ட்அப் ‘நவி’ பற்றி பேசுகையில், வாரத்தில் 80 முதல் 100 மணிநேரம் வேலை செய்கிறேன் என்று கூறியுள்ளார். வார இறுதி நாட்களைக் கூட மகிழ்வுடன் செலவிட ஒதுக்குவதில்லையாம் பன்சல்,
“மக்கள் சில சமயங்களில் என்னை வெறுக்கின்றனர்...” என்கிறார்.
ஃபிளிப்கார்ட்டிலிருந்து வெளியே வந்த பிறகு 6 மாதங்களில் நவி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கினார் பன்சல். இவரது நிறுவனம் தனிநபர் மற்றும் வீட்டுக் கடன்கள், யுபிஐ, காப்பீடு, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் தங்கம் ஆகியவற்றை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. மணிகண்ட்ரோல் ஊடகத்திற்கு பன்சல் கூறும்போது,
"முதலில் வீட்டிலிருந்து வேலை என்பது இருக்காது... பிறகு வார இறுதி நாட்களிலும் நீங்கள் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், நான் வாரத்திற்கு 80-100 மணிநேரம் செலவிடுகிறேன்,” என்றார்,
அதாவது, மற்றவர்களும் இப்படி உழைக்க வேண்டும் என்றெல்லாம் பன்சல் பரிந்துரை செய்யவில்லை. மாறாக தன் வர்த்தகத்துக்குத் தேவையான சிறுசிறு விவரங்கள், நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள நேரம் செலவிட வேண்டும் என்கிறார்.
கோவிட் தொற்றுநோய்களின் போது வீட்டிலிருந்து வேலை செய்வது தனக்கு ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே என்றும், தனது ஸ்டார்ட்அப்பில் இப்போது தொலைதூர வேலைகளுக்கு இடமில்லை என்றும் சச்சின் பன்சல் கூறினார்.
“அலுவலகத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். வீட்டிலிருந்து பணியாற்றுவது தற்காலிகமான ஒன்றுதான். அது ஒருபோதும் நிரந்தரமாக முடியாது. அலுவலகத்திலிருந்து 100% பணியாற்றுபவர்கள் நாங்கள்,” என்றார்.
அவர் மேலும் கூறும்போது தான் ஒரு ஏஞ்சல் முதலீட்டாளராக இருப்பதை நிறுத்தி விட்டேன் என்றார். நவி விரைவில் முதல் பங்குகள் வெளியீட்டை எதிர்நோக்குகிறது என்றார்.
"நாங்கள் ஒரு வருடத்திற்கு முன்பு ஐபிஓ வெளியீட்டிற்கு முயற்சித்தோம். நேரம் மோசமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். எனவே, சில மாதங்களில், நாங்கள் தயாராகிவிட்டால், நாங்கள் நிச்சயம் முதல் பங்கு வெளியிட்டுத் திட்டத்தை நிறைவேற்றுவோம்,” என்கிறார் பன்சல் உற்சாகமாக.
தொகுப்பு: முத்துகுமார்