‘கண்டிப்பா ஆபிசுக்கு வரணும்; இல்லைனா...’ - ஊழியர்களை எச்சரித்த TCS!
டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களை கடுமையாக எச்சரித்துள்ளது தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளது தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், தனது ஊழியர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் படி, TCS தனது ஊழியர்களை குறைந்தபட்சம் மாதத்திற்கு 12 நாட்களாகவது அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்றும், யாராவது இதனை கடைப்பிடிக்கத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில்,
“உடனடியாக அமலுக்கு வந்துள்ள நடைமுறையின் படி, ஊழியர்கள் தங்களது அலுவலகத்தில் இருந்து பணிபுரியத்தொடங்குமாறு எச்சரிக்கப்படுகிறீர்கள் அல்லது அறிவுறுத்தப்படுகிறீர்கள்,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசிஎஸ் தனது ஊழியர்களை வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்பும் பட்சத்தில் வேலை அதிக உற்சாகத்துடன் நடைபெறும் எனக் கருதுகிறது.
மேலும், வாரத்தில் சில நாட்களுக்காவது அலுவலகம் வந்து செல்வது ஊழியர்களிடையே புது உற்சாகத்தையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தும் என கருதுவதாக டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'அடுத்து 2 ஆண்டுகளுக்கு ரொம்ப கஷ்டம் தான்' - மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா எச்சரிக்கை!